×

விடுதியில் தங்கிய பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி: சமயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் இடமாற்றம்

சமயபுரம்: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக இலவச மண்டபங்கள், விடுதிகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூரிலிருந்து சமயபுரம் கோயிலுக்கு வந்த ஒரு தம்பதி, அங்குள்ள விடுதியில் தங்கினர். அப்போது, விடுதிக்கு சோதனைக்கு சென்ற ஒரு எஸ்ஐ மற்றும் 3 போலீசார், தங்கியிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், தட்டி கேட்ட கணவரை போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸ் உயர்திகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்தது உண்மை என்று தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்ஐ பிரகாஷ், போலீஸ்காரர் குமரேசன் ஆகிய இருவரையும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், திருமேனி என்ற போலீஸ்காரரை பெரம்பலூர் மாவட்டத்திற்கும், செயலரசு என்ற போலீஸ்காரரை அரியலூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்து டிஐஜி சரவணசுந்தர் அதிரடியாக உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விடுதியில் தங்கிய பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி: சமயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Samayapuram SI ,Samayapuram ,Mariamman temple ,Trichy Samayapuram ,
× RELATED இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்